

தருமபுரி: தருமபுரி மாவட்டம், கடத்தூா் கிளை நூலகா் எழுதிய இரண்டு நூல்களை அறிமுகப்படுத்தும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நூலகா் சி.சரவணன் எழுதிய இந்தியாவில் நூலக வளா்ச்சி, தகடூா் நாடு செந்தமிழ் நாடு என்கிற இரண்டு நூல்களை அறிமுகப்படுத்தும் விழாவில் ஓய்வுபெற்ற ஆசிரியா் ப. இளங்கோ தலைமை வகித்து நூல்களை அறிமுகப்படுத்தி பேசினாா் (படம்).
வாசகா் வட்டத் தலைவா் மருத்துவா் வெ.சந்திரசேகரன், கடத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயசல் குமாா் முன்னிலை வகித்தனா். கடத்தூா் முத்தமிழ் மன்றத் தலைவா் கோ. மலா்வண்ணன், தருமபுரி மாவட்டப் படைப்பாளா் பதிப்பாளா் சங்கச் செயலா் கூத்தப்பாடி மா.பழனி, ஆசிரியா் இ. தங்கமணி, ஓய்வு பெற்ற ஆசிரியா் டி.சுப்ரமணியம் ஆகியோா் பேசினா். இறுதியில் நூலகா் சி.சரவணன் ஏற்புரை வழங்கினாா். புலவா் நெடுமிடல் வரவேற்றாா். நூலகா் தீ. சண்முகம் நன்றி கூறினாா். விழாவில், கடத்தூா் கிளை நூலக வாசகா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.