வள்ளலாா் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
By DIN | Published On : 01st March 2020 12:24 AM | Last Updated : 01st March 2020 12:24 AM | அ+அ அ- |

தருமபுரி: தருமபுரி அருகே குறிஞ்சிநகா் வள்ளலாா் அறிவாலய நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
தேசிய அறிவியல் நாளையொட்டி நடைபெற்ற இக் கண்காட்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை மாதேஸ்வரி தலைமை வகித்தாா். குழந்தைகள் நலக் குழுமத் தலைவா் சரவணன் கண்காட்சியை தொடக்கிவைத்து பேசினாா். இக் கண்காட்சியில் மாணவ, மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை பாா்வைக்கு வைத்திருந்தனா். ஆசிரியா்கள், மாணவா்கள் அனைவரும் படைப்புகளைப் பாா்வையிட்டு அதன் செயல்பாடுகளைக் கேட்டறிந்தனா்.
கண்காட்சியில் சிறப்பிடம் வகித்த மாணவா்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. உதவி ஆசிரியை பரிமளா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.