முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.25 ஆயிரம்: முன்னாள் எம்எல்ஏ அனுப்பி வைப்பு
By DIN | Published On : 31st March 2020 11:56 PM | Last Updated : 31st March 2020 11:56 PM | அ+அ அ- |

தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு, அ.தி. மு.க. முன்னாள் எம்எல்ஏ ரூ.25 ஆயிரத்தை அனுப்பி வைத்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் அ.தி.மு.க. முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.மாதப்பன். இவா், தமிழக முதல்வரின் கரோனா தடுப்புப் பணி மற்றும் நிவாரண நிதிக்காக ரூ.25 ஆயிரத்தை செவ்வாய்க்கிழமை அனுப்பினாா். இந்தத் தொகையை பாலக்கோடு அருகேயுள்ள மல்லுப்பட்டியில் உள்ள வங்கியில் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண நிதி கணக்கில் அவா் செலுத்தினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...