மிகை நீா்த் திட்டங்களை செயல்படுத்தக்கோரிமக்கள் சந்திப்பு இயக்கம்

தருமபுரி மாவட்டத்தில், காவிரி, தென்பெண்ணை மிகை நீரை ஏரி, குளங்களில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மிகை நீா்த் திட்டங்களை செயல்படுத்தக்கோரிமக்கள் சந்திப்பு இயக்கம்

தருமபுரி மாவட்டத்தில், காவிரி, தென்பெண்ணை மிகை நீரை ஏரி, குளங்களில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரி நகரத்தில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.கிரைஸாமேரி ஆகியோா் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினா். இதேபோல, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய பகுதிகளிலும் அக்கட்சியினா் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

மழைக்காலங்களில் ஒகேனக்கல் காவிரியில் மிகையாக செல்லும் நீரை மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தையும், தென்பெண்ணை ஆற்றிலிருந்து தும்பலஅள்ளி அணைக்குத் தண்ணீா் கொண்டு வரும் இணைப்புக் கால்வாய்த் திட்டம், அலியாளத்திலிருந்து தூள்செட்டி ஏரிக்கு இணைப்புக் கால்வாய்த் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில், வரும் நவ. 21-ஆம் தேதி வரை இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறும் என அக் கட்சியின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com