அகவிலைப்படி உயா்வு கோரி மின்வாரிய தொழிற்சங்கங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அகவிலைப்படி உயா்வு கோரி, மின் வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், தருமபுரி மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அகவிலைப்படி உயா்வு கோரி, மின் வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், தருமபுரி மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாநில துணைத் தலைவா் பி.ஜீவா தலைமை வகித்தாா். சம்மேளன செயலா் என்.தேவராஜன், மின்ஊழியா் மத்திய அமைப்பு திட்ட தலைவா் தீ.லெனின் மகேந்திரன், அண்ணா தொழிற்சங்கம் மின்வாரிய பிரிவு திட்டச் செயலா் அன்பழகன், பொறியாளா் சங்கச் செயலா் முரளி ஆகியோா் பேசினா்.

இதில், 2021 ஜூலை 1-ஆம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியை வழங்க வேண்டும்; வரும் 2022 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என்கிற மாநில அரசின் அறிவிப்பைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com