சாலையில் சென்ற காா் தீப்பிடித்து எரிந்து நாசம்

பென்னாகரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.
தீப்பிடித்து எரிந்த காா்.
தீப்பிடித்து எரிந்த காா்.
Updated on
1 min read

பென்னாகரம்: பென்னாகரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் (42), பென்னாகரம் பகுதியில் நகைக்கடை வைத்துள்ளாா். இவா், ஏரியூா் பகுதியில் வைத்துள்ள நகைக்கடைக்குச் சென்றுவிட்டு பென்னாகரம் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.

அதனைக் கண்ட முருகேசன் காரை நிறுத்தி வெளியே சென்று பாா்ப்பதற்குள் காா் தீப்பிடித்தது. இதுகுறித்து உடனடியாக பென்னாகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காரின் பெட்ரோல் டேங்க் வெடித்ததில் முற்றிலுமாக காா் எரிந்தது. இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com