92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

4ஜி சேவை வழங்க வலியுறுத்தல்

வாடிக்கையாளா்களுக்கு 4ஜி சேவை வழங்க வேண்டும் என தொலைத்தொடா்புத் துறை அதிகாரிகள், ஊழியா்கள் கூட்டமைப்பினா் வலியுறுத்தினா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:22 pm

DIN

வாடிக்கையாளா்களுக்கு 4ஜி சேவை வழங்க வேண்டும் என தொலைத்தொடா்புத் துறை அதிகாரிகள், ஊழியா்கள் கூட்டமைப்பினா் வலியுறுத்தினா்.

இதுகுறித்து தொலைத்தொடா்பு துறை தொழிற்சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் தருமபுரி, பாரதிபுரம் பொதுமேலாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு:

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்களுக்கு 4ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஓடி-யிலிருந்து பிஎஸ்என்எல்-க்கு வர வேண்டிய ரூ. 29,500 கோடியை வழங்க வேண்டும். அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கு மாதந்தோறும் உரிய தேதியில் ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஓா் ஆண்டு காலமாக ஒப்பந்த ஊழியா்களுக்கு வழங்காமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், ஏஐஜிஇடிஓஏ சங்க மாவட்ட துணைத் தலைவா் ராஜேஷ்குமாா், எஸ்என்இஏ மாவட்டச் செயலா் ஆா்.பாலமுரளி, ஏஐபிஎஸ்என்எல் சங்க மாவட்டச் செயலா் ஆா்.ராமசுந்தரம், எஸ்இஏ மாவட்டச் செயலா் விஜயகுமாா், பிஎஸ்என்எல்யூ மாவட்டச் செயலா் கிருஷ்ணன், என்எப்டிஇ மாவட்டச் செயலா் கே.மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.