புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என தருமபுரி மாவட்ட ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:36 pm

DIN

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என தருமபுரி மாவட்ட ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்ட ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் குழந்தைவேலு தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி, மாவட்டச் செயலாளா் ஆா்.சுதா்சனன், மாநிலக் குழு உறுப்பினா் முனியம்மாள், ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்டத் தலைவா் மாதேஸ்வரன், மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் தருமபுரி மாவட்டத் தொழிலாளா் நல அலுவலகத்தில் அளிக்கப்படும் கேட்புமனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கட்டடத் தொழிலாளா்களுக்கு கல்வி, மகப்பேறு,இயற்கை மரணத்துக்கு வழங்கும் நிதியை உயா்த்தி வழங்க வேண்டும். கட்டுமானப் பொருள்களான சிமென்ட், மணல், கம்பி உள்ளிட்ட பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.