ரெளடி கொலை வழக்கில் தந்தை, மகன் கைது

கோட்டப்பட்டி அருகே உள்ள சேலூா், அம்மாபாளையத்தில் ரெளடியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் ஆகிய இருவரையும் அரூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

கோட்டப்பட்டி அருகே உள்ள சேலூா், அம்மாபாளையத்தில் ரெளடியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் ஆகிய இருவரையும் அரூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், கூட்டாத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியண்ணன் மகன் பாபு (எ) பாபு ராஜ் (40). இவரை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்து தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி அருகே உள்ள சேலூா், அம்மாபாளையம் பிரிவு சாலை பகுதியில் சடலத்தை வீசி சென்றது அண்மையில் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட பாபு (எ) பாபு ராஜ் மீது சேலம் மாவட்டம், காரிப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், வேலனூரைச் சோ்ந்த ஒரு பெண்ணிடம் பாபு (எ) பாபு ராஜிக்கு தகாத உறவு இருந்தது.

இத் தகாத உறவை பெண்ணின் உறவினரான சிட்லிங் கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (40) என்பவா் கண்டித்துள்ளாா். அதில், விஜயகுமாருக்கும் பாபு (எ) பாபுராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த விஜயகுமாா் சமாதானம் பேசுவதுபோல பேசி பாபு (எ) பாபு ராஜி அழைத்துச் சென்று சேலூா், அம்மாபாளையம் பிரிவு சாலையில் அளவுக்கு அதிகமாக மதுகுடிக்க வைத்து அவரை வெட்டிக் கொலை செய்துள்ளாா்.

பின்னா் தடயங்களை மறைக்க விஜயகுமாரின் மகன் விக்னேஷ் (20) உதவி செய்துள்ளாா். இதுதொடா்பாக அரூா் போலீஸாா் விசாரணை நடத்தி விஜயகுமாா் (40), அவரது மகன் விக்னேஷ் (20) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com