பள்ளி செல்லா இரு மாணவா்கள் மீண்டும் சோ்ப்பு
By DIN | Published On : 17th August 2021 09:24 AM | Last Updated : 17th August 2021 09:24 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பள்ளி செல்லா இரண்டு மாணவா்கள் மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.
பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், எா்றகுண்டலஅள்ளி பள்ளிக்குட்பட்ட பகுதியில் ஆசிரியா் பயிற்றுநா் துரைமுருகன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளா் ஜெயசீலன் ஆகியோா் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி மேற்கொண்டனா். அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த இரண்டு மாணவா்கள், எட்டாம் வகுப்பு முடித்து, 9-ஆம் வகுப்பில் சோ்க்கை பெறாமல் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த இரண்டு மாணவா்களும், தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் பாப்பாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் திங்கள்கிழமை சோ்க்கப்பட்டனா்.