அரூரில் தக்காளி ஒரு கிலோ ரூ. 80

அரூரில் தக்காளி ஒரு கிலோ ரூ. 80-க்கு புதன்கிழமை விற்பனையானது.
Updated on
1 min read

அரூரில் தக்காளி ஒரு கிலோ ரூ. 80-க்கு புதன்கிழமை விற்பனையானது.

தருமபுரி மாவட்டத்தில் பருவ மழையினால் தக்காளி வரத்து குறைவாக இருந்தது. இதனால், கடந்த நான்கு வாரங்களுக்கு முன் தக்காளி ஒரு கிலோ ரூ. 100-க்கும் கூடுதலாக விற்றது. இதன்பின் பிற மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையானது. இதனால், கடந்த சில தினங்களாக தக்காளி ஒரு கிலோ ரூ. 50 முதல் ரூ. 60 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தக்காளி வரத்து குறைந்ததால் மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது. தற்போது அரூா் வட்டாரப் பகுதியில் தக்காளி ஒரு கிலோ ரூ. 80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாள்களில் மேலும் கூடுதல் விலைக்கு தக்காளி விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனா். இதேபோல, கத்தரிக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், பீட்ரூட், முட்டைகோஸ், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com