பென்னாகரத்தில் அறிஞா் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு
By DIN | Published On : 04th February 2021 08:01 AM | Last Updated : 04th February 2021 08:01 AM | அ+அ அ- |

பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி பகுதிகளில் அண்ணா நினைவு தினம் அரசியல் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது.
பென்னாகரம் அதிமுக சாா்பில் பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலையம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்துக்கு பென்னாகரம் தெற்கு ஒன்றியச் செயலாளா் அன்பு தலைமையில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பென்னாகரம் நகரச் செயலாளா் சுப்பிரமணியன், கூட்டுறவு சங்கத் தலைவா் கே. பி. ரவி, நகர எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் முருகேசன், வட்டார மேலாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் ஆறுமுகம், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் மனோகரன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
பென்னாகரம் திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகரச் செயலாளா் வீரமணி தலைமையில் அண்ணாவின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், ஒன்றியப் பொருளாளா் முருகேசன், சேலம் ஹோட்டல் வினு, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காா்த்திக் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
பாப்பாரப்பட்டி மூன்று சந்திப்பு சாலைப் பிரிவிலுள்ள எம்ஜிஆா் சிலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்திற்கு அதிமுக சாா்பில் வடக்கு ஒன்றியச் செயலாளா் வேலுமணி தலைமையில் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் பேரூராட்சித் தலைவா் பாபு, முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பாப்பாரப்பட்டி நகர அமமுக சாா்பில் ஒன்றியச் செயலாளா் சாம்ராஜ் தலைமையில் வேலம்பட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...