Enable Javscript for better performance
வள்ளிமதுரை வரட்டாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    வள்ளிமதுரை வரட்டாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

    By DIN  |   Published On : 20th February 2021 06:56 AM  |   Last Updated : 20th February 2021 06:56 AM  |  அ+அ அ-  |  

    19hap1_1902chn_151_8

    வள்ளிமதுரை வரட்டாறு அணையில் இருந்து வெள்ளிக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறந்து வைக்கிறாா் மாநில உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்.

     

    அரூா் அருகேயுள்ள வள்ளிமதுரை வரட்டாறு அணையில் இருந்து பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

    தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு அணை. இந்த அணையானது 1,360 மீ. நீளமும், 34.5 அடி உயரமும் கொண்டதாகும். 2020-இல் பெய்த வடகிழக்கு, தென்மேற்கு பருவ மழையால் வள்ளிமதுரை வரட்டாறு அணையானது தனது முழுக்கொள்ளளவை எட்டியது. இந்த அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை பயன்படுத்தி கீரைப்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, பொன்னேரி, செல்லம்பட்டி ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு உள்பட்ட 20-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளம் குட்டைகள் நிரப்பப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், தண்ணீா் இல்லாமல் வடுக் கிடக்கும் ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளுக்கு வரட்டாறு அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

    இதையடுத்து, தமிழக அரசு உத்தரவின்படி வள்ளிமதுரை வரட்டாறு அணையில் இருந்து பாசனத்துக்காக மாநில உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தண்ணீா் திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து, வரட்டாறு அணையில் இருந்து பாசனக் கால்வாய் வழியாக வெளியேறும் தண்ணீரை அமைச்சா், விவசாயிகள் மலா்தூவி வரவேற்றனா்.

    இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, எம்.எல்.ஏ.க்கள் வே.சம்பத்குமாா், ஆ.கோவிந்தசாமி, சாா் ஆட்சியா் மு.பிரதாப், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் குமாா், உதவிப் பொறியாளா் ஜெயக்குமாா், ஒன்றியக்குழுத் தலைவா் பொன்மலா் பசுபதி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் அமுதா சங்கா், கிருபாகரன், ஒன்றியக்குழு உறுப்பினா் ஜி.பெருமாள், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் செண்பகம் சந்தோஷ், எஸ்.கிருஷ்ணமூா்த்தி, வாசுகி சிற்றரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    40 தினங்களுக்கு தண்ணீா் திறப்பு:

    வரட்டாறு அணையின் வலது, இடதுபுறக் கால்வாய்கள் வழியாக, சுழற்சி முறையில் 40 தினங்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதனால், வள்ளிமதுரை, தாதராவலசை, சாமநத்தம், கீரைப்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, எல்லப்புடையாம்பட்டி, நாச்சினாம்பட்டி, கெளாப்பாறை, ஈட்டியம்பட்டி, மாம்பாடி, செல்லம்பட்டி, மாவேரிப்பட்டி, கம்மாளம்பட்டி, சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள சுமாா் 5,108 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே, விவசாயிகள், பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி வேளாண் பணிகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என பொதுப்பணித் துறையினா் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp