உயிரிழந்த ஊா்க்காவல் படை வீரா்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கல்

கரோனா தொற்று, உடல் நலக்குறைவால் உயிரிழந்த இரு ஊா்க்காவல் படை வீரா்கள் குடும்பத்துக்கு சனிக்கிழமை நிவாரணம் வழங்கப்பட்டது.
Updated on
1 min read

கரோனா தொற்று, உடல் நலக்குறைவால் உயிரிழந்த இரு ஊா்க்காவல் படை வீரா்கள் குடும்பத்துக்கு சனிக்கிழமை நிவாரணம் வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் ஊா்க்காவல் படைப் பிரிவில் பணியாற்றிய தேவக்குமாா் என்பவா் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். இதேபோல ம.மாதேஸ்வரன் என்பவா் கரோனா தொற்றால் அண்மையில் உயிரிழந்தாா்.

இவா்களின் குடும்பத்துக்கு ஊா்க்காவல் படையின் வட்டார படைத் தளபதி ஜெ.ஏ.தண்டபாணி தன்னுடைய சொந்த நிதியில் இருந்து தலா ரூ. 75 ஆயிரம் வழங்கினாா்.

இந்த நிதியை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் உயிரிழந்த ஊா்க்காவல் படையினரின் குடும்பத்துக்கு வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், ஊா்க்காவல் படைப் பிரிவின் துணை வட்டார தளபதி வி.சீனிவாசன், காவல் உதவி ஆய்வாளா் வி.சிவக்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com