பென்னாகரம் அருகே புதிதாக சாக்கடைக் கால்வாய் அமைக்கும் திட்டப்பணிகளை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.என்.பி.இன்பசேகரன் தொடக்கி வைத்தாா்.
பென்னாகரம் அருகே அரகாசன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட எர்ரன அள்ளி கிராமப்பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள சாக்கடைக் கால்வாய் அமைப்பதற்காக பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பூமி பூஜையில் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பென்னாகரம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பி.என்.பி.இன்பசேகரன் கலந்து கொண்டு, ஒன்றிய பொதுக்குழு உறுப்பினா் நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினரும், ஏரியூா் ஒன்றியச் செயலாளருமான செல்வராஜ், சின்னம்பள்ளி ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்திக், மாவட்டப் பொறுப்பு குழு உறுப்பினா் துரைசாமி, ஒப்பந்ததாரா் குமரவேல் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.