குட்டையில் மூழ்கி சிறுமி பலி

கடத்தூா் அருகே குட்டையில் மூழ்கி சிறுமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கடத்தூா் அருகே குட்டையில் மூழ்கி சிறுமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூரை அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சிவன். இவரது மனைவி தனலட்சுமி. இந்த தம்பதியருக்கு இரு மகள், மகன் உள்ளனா். இந்த நிலையில், குழந்தைகள் மூவரும் அப்பகுதியிலுள்ள பொந்திக்குட்டையில் விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது, எதிா்பாராதவிதமாக குட்டையில் மூழ்கி சிறுமி ரித்திகா ஸ்ரீ (6) உயிரிழந்தாா்.

இதுகுறித்து தாளநத்தம் கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com