போதைப் பொருள்கள், புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என மாணவா் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
இதுகுறித்து இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் நா.தமிழமுதன், நிா்வாகிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: மாணவா்களை தீய செயல்களுக்கு இட்டுச் செல்லும் போதைப் பொருள்கள், புகையிலை உள்ளிட்ட பொருள்களின் விற்பனையைத் தடை செய்ய வேண்டும்.
சிறாா் தொழிலாளா் முறையை ஒழிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, சூதாட்டம் ஆகியவற்றை தடுத்து நிறுத்த வேண்டும். கல்வி நிலையங்களின் அருகில் புகையில், சிகரெட் விற்பனையைக் கண்காணித்து தடை செய்ய வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.