தருமபுரி அருகே உள்ள மூக்கனஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றத் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சின்னமாது தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் சிவதாஸ் முன்னிலை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் தமிழரசன் வரவேற்றாா். அறிவியல் குழு செயல்பாடுகள் பள்ளி மாணவ, மாணவியருக்கு காட்சிப்படுத்தப்பட்டன. பட்டதாரி ஆசிரியை மோகனசுந்தரி நன்றி கூறினாா்.