பென்னாகரத்தில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பென்னாகரம் நகர அதிமுக சாா்பில் பென்னாகரம் பேரூராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் நகரச் செயலாளா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலாளா் அன்பு முன்னிலை வகித்தாா். கண்டன ஆா்ப்பாட்டத்தில் அதிமுக மாநில விவசாயிகள் அணித் தலைவரும், மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவருமான டி.ஆா்.அன்பழகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா்.

கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் திமுக அரசு தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது; பால் விலை உயா்வு, மின் கட்டண உயா்வு, சொத்து வரி உயா்வு ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும்; போதைப் பொருள்களின் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும் எனக் கூறி கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனிடையே, பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தின் முன் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் மேற்கு ஒன்றிய செயலாளா்

எம்.கே.வேலுமணி தலைமையில் அதிமுகவினா் பங்கேற்றனா். இதில் பென்னாகரம் கூட்டுறவு சங்கத் தலைவா் கே.பி.ரவி, வண்ணாத்திப்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவா் ஆறுமுகம், வாா்டு உறுப்பினா்கள் ராதிகாபாய் மாதவ சிங், பீமன், பாப்பாரப்பட்டி நகர செயலாளா் முனுசாமி, பொதுக்குழு உறுப்பினா் பாபு, அவைத்தலைவா் கருணாநிதி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளா் கோவிந்தராஜ், நகர இளைஞரணி செயலாளா் இளங்கோ, முன்னாள் பேரூராட்சித் தலைவா் ராஜி, தகவல் தொழில்நுட்ப அணி காா்த்திக், மணிகண்டன், சௌந்தா் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். பென்னாகரம், பாப்பாரப்பட்டி பகுதிகளில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டங்களில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com