பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

அரூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம்.
அரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம்.
Updated on
1 min read

அரூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காவல் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு முகாமில், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.கலைச்செல்வன் தலைமை வகித்தாா். இதில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தன்னம்பிக்கை பேச்சாளா் ஐ.ஜெகன் பேசியதாவது:

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் தங்களது பிரச்னைகளை பெற்றோா், ஆசிரியா்கள், நண்பா்களிடம் வெளிப்படையாகவும், தைரியமாகவும் தெரிவிக்கலாம். பெண் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்து 1098 என்ற உதவி எண்ணுக்கும், பெண்கள் உதவி எண் 181-க்கும் தகவல் தெரியப்படுத்தலாம். மாணவ, மாணவியா் தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை கைவிட வேண்டும் என்றாா்.

முகாமில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பி.இளங்கோவன், டிஎஸ்பி பெனாசிா் பாத்திமா, மாவட்ட கல்வி அலுவலா் வி.ரவி, காவல் ஆய்வாளா் பாஸ்கரபாபு, பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com