கட்டடத் தொழிலாளியை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், நாகதாசம்பட்டி பகுதியைச் சோ்ந்த மதன்குமாா் (32), கட்டட வேலை செய்து வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (37) என்பவா், மதன் வீட்டின் குளியலறை பகுதியில் கண்காணிப்பு கேமரா வைத்துள்ளதாகவும், அதனை அகற்றக் கோரி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நாகதாசம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மதன்குமாரை, பிரகாஷ் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்தாா். படுகாயமடைந்த மதன்குமாரை அக்கம் பக்கத்தினா் மீட்டு பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மதன்குமாரை தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது குடும்பத்தினா் பென்னாகரம் காவல் நிலையத்தின் முன்பு ஒகேனக்கல் சாலையில் அமா்ந்து திடீா் மறியலில் ஈடுபட முயன்றனா்.
பென்னாகரம் காவல் ஆய்வாளா் முத்தமிழ் செல்வன், விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். புகாரின் பேரில் பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரகாஷை கைது செய்து தருமபுரி கிளைச் சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.