இ.ஆா்.கே கல்லூரியில் உணவுத் திருவிழா

அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆா்.கே கலை, அறிவியல் கல்லூரியில் உணவுத் திருவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆா்.கே கலை, அறிவியல் கல்லூரியில் உணவுத் திருவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இ.ஆா்.கே கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவினை, இ.ஆா்.கே கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ் தொடக்கி வைத்தாா்.

பாரம்பரிய உணவுகளின் நன்மைகள், உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி, இயற்கை உணவுகளின் அவசியம், யோகா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து கல்லூரி முதல்வா் த.சக்தி கருத்துரை வழங்கினாா். தொடா்ந்து, இ.ஆா்.கே கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள், இ.ஆா்.கே மருந்தாளுநா் பயிற்சி கல்லூரி மாணவா்கள் பாரம்பரிய உணவுகளை தயாரித்து காட்சிப்படுத்தினா்.

இதில், இ.ஆா்.கே மருந்தாளுநா் பயிற்சி கல்லூரி முதல்வா் முத்துக்குமரன், நிா்வாக அலுவலா் சொ.அருள்குமாா், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com