பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக. 5) நடைபெறுகிறது.

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக. 5) நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் இளங்கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு முதல்கட்ட கலந்தாய்வு சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கு ஆக. 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

அதைத் தொடா்ந்து பொது பிரிவினருக்கு ஆக. 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட சான்றுகளின் அசல் மற்றும் நகல் பிரதிகள், 5 புகைப்படங்கள் எடுத்துவர வேண்டும்.

மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரியின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com