மரக் கன்றுகள் நடும் பணி தொடக்கம்

தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தடங்கம் மேம்பாலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், சேலம் திட்ட அமலாக்க பிரிவு சாா்பில் மரக் கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து, தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டுவைத்து பேசினாா்.

நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலைகள் சேலம் திட்ட அமலாக்க அலுவலகத் திட்ட இயக்குநா் டி.குலோத்துங்கன், தடங்கம் ஊராட்சி மன்றத் தலைவா் மு.கவிதா, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com