அரசு கல்லூரியில் நான்காம் கட்ட இறுதி கலந்தாய்வு

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நான்காம் கட்ட இறுதி கலந்தாய்வு குறித்து கல்லூரி முதல்வா் செல்வநாயகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நான்காம் கட்ட இறுதி கலந்தாய்வு குறித்து கல்லூரி முதல்வா் செல்வநாயகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மாமரத்துப்பள்ளம் பகுதியில் உள்ள பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2022- 23 கல்வியாண்டில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவா்களுக்கான சோ்க்கையில் நான்காம் கட்ட இறுதிக் கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இதில், இணையவழியில் விண்ணப்பிக்காத மாணவா்களுக்கு 29-ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 5 மணி வரை கல்லூரி வளாகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும், அதற்கான பதிவு மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ. 50, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவா்கள் ரூ. 2 செலுத்தி அசல் ஜாதிச் சான்றிதழைக் காண்பித்தும், நகல்களை சமா்ப்பித்தும் பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com