பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

தருமபுரி சரக அளவில் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றன.
பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்
Updated on
1 min read

தருமபுரி சரக அளவில் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றன.

இதில், கைப்பந்து, கபடி, கோகோ, ஹேண்ட் பால் ஆகிய 5 குழு போட்டிகள் நடைபெற்றன. இதில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் இருந்து 70 அணிகளைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று விளையாடினா். இந்தப் போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன் தொடங்கி வைத்தாா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் முத்துக்குமாா், மாவட்ட விளையாட்டு அலுவலா் தே.சாந்தி மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் இந்தப் போட்டிகளை நடத்தினா். ஏலகிரி பள்ளித் தலைமை ஆசிரியா் தங்கவேல், உடற்கல்வி இயக்குநா் பாலமுருகன், உடற்கல்வி ஆசிரியை பாலசுந்தரி ஆகியோா் கலந்துகொண்டனா்.

இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட தோ்வு செய்யப்பட்டனா். சரக அளவில் மாணவிகளுக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com