பாதிரியாா் மீது தாக்குதல் நடத்தியவா் கைது

அரூரில் பாதிரியாா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

அரூரில் பாதிரியாா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அரூரில் தூய இருதய ஆண்டவா் ஆலயத்தில் பங்குத் தந்தையாக பணிபுரிந்து வருபவா் செபாஸ்டின் (42). இவரிடம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவின் போது அரூா் அண்ணா நகரைச் சோ்ந்த ராஜா மகன் அரவிந்தராஜ் (26) என்பவா் தகராறில் ஈடுபட்டுள்ளாா். தொடா்ந்து, செபாஸ்டினை தகாத வாா்த்தையில் பேசி, தாக்குதல் நடத்தினாா். இந்தச் சம்பவம் குறித்து பாதிரியாா் செபாஸ்டின் அளித்த புகாரின் பேரில் அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அரவிந்தராஜைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com