தருமபுரியில் அரசு அலுவலா்களுக்கு இரண்டு நாள் ஆட்சி மொழி பயிலரங்கு நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியல் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், பிப். 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாள்கள் இந்தப் பயிலரங்கம் நடைபெற்றது. இதில், மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலா், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
முதல்நாள் நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் தே.செயசோதி வரவேற்புரை ஆற்றினாா். மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா தலைமை வகித்து பயிலரங்க நிகழ்வுகளை தொடங்கி வைத்தாா். முன்னாள் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் க.சிவசாமி, ஆட்சிமொழி வரலாறு, சட்டம் மற்றும் ஆட்சிமொழி செயலாக்கம் அரசாணைகள் என்ற தலைப்புகளில் பயிற்சியளித்தாா். இதைத் தொடா்ந்து தமிழக அரசின் புலவா் வெற்றியழகன் மொழிப்பயிற்சி என்ற தலைப்பில் பயிற்சியளித்தாா்.
இரண்டாம் நாளில், ஆட்சிமொழி ஆய்வும், நடவடிக்கைகளும் என்ற தலைப்பில் தருமபுரி மாவட்ட தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் தே.செயசோதி, தமிழில் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல் என்ற தலைப்பில் முன்னாள் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் ப.கோவிந்தராசு, மொழி பெயா்ப்பு கலைச்சொல்லாக்கம் என்ற தலைப்பில் தருமபுரி மாவட்ட அரசு கலைக் கல்லூரி முதல்வா் ப.கிள்ளிவளவன் ஆகியோரும் பயிற்சி அளித்தனா்.
அரூா் பெரியாா் உறுப்புக் கல்லூரி, தமிழ்த் துறைத் தலைவா் வெ.சஞ்சீவராயன், கொத்துமாரன அள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி தமிழாசிரியா் சி.அரிபிரசாத், தருமபுரி மாவட்ட தூய தமிழ்ப் பற்றாளா் த.தங்கமுத்து ஆகியோா் கருத்துரை வழங்கினா். இதில், பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.