சிறுமி கடத்தல்: மேலும் ஒருவா் கைது

அரூா் அருகே சிறுமியை கடத்திய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அரூா் அருகே சிறுமியை கடத்திய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அரூா் வட்டாரப் பகுதியில் பிளஸ் 1 படித்து வந்த சிறுமியை இளைஞா்கள் இருவா் மே 22-ஆம் தேதி கடத்திச் சென்ாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்த விசாரணையில், கூக்கடப்பட்டியைச் சோ்ந்த காா்த்திக் (24) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காா்த்திக்கை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய குருபரஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த அஜீத் (34) என்பவரை குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாா் தேடி வந்தனா். தொடா்ந்து, பெங்களூரில் பதுங்கி இருந்த அஜீத்யை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com