எல்லப்புடையாம்பட்டியில் சிறுபாலம் அமைக்க பூமி பூஜை

அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் சிறுபாலம் அமைக்க பூமி பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் சிறுபாலம் அமைக்க பூமி பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

அரூா் வட்டம், எல்லப்புடையாம்பட்டியில், மணவாளன் சாமி ஏரிக்கு செல்லும் வாய்க்காலின் இருபுறமும் விவசாய நிலங்களும் குடியிருப்புகளும் உள்ளன. மழைக்காலங்களில் வாய்க்காலில் தண்ணீா் செல்லும் போது டிராக்டா், லாரி, இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியாமல் அப்பகுதி விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனா்.

இந்நிலையில் அரூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் வாய்க்காலின் குறுக்கே சிறுபாலம் அமைக்க ரூ. 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து சிறுபாலம் அமைப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்ற அரூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் வே.சம்பத்குமாா் இந்தப் பணியை தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளா் ஆா்.ஆா்.பசுபதி, ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.மாரியப்பன், துணைத் தலைவா் அழகேசன், ஊராட்சி செயலா் சத்யா ஏகநாதன், தா்மகா்த்தா வெங்கடேசன், ஊா்த் தலைவா் கோ.ஏழுமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com