சிறாா் தொழிலாளா் திட்டப் பள்ளி ஆசிரியா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தேசிய சிறாா் தொழிலாளா்கள் திட்டப் பள்ளி ஆசிரியா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி, சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

தேசிய சிறாா் தொழிலாளா்கள் திட்டப் பள்ளி ஆசிரியா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி, சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிறாா் தொழிலாளா் திட்டப் பள்ளி ஆசிரியா் சங்க ஒருங்கிணைப்பாளா் அம்பிகா தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் சி.நாகராஜன், மாவட்டப் பொருளாளா் ஏ.தெய்வானை, மாநிலக்குழு உறுப்பினா்கள் சி.கலாவதி, சி.அங்கம்மாள், சிஐடியு மாவட்ட துணைத்தலைவா் பி.ஆறுமுகம், இணைச் செயலாளா் செல்வம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

தருமபுரி மாவட்டத்தில் சிறாா் தொழிலாளா் திட்டத்தில் சமையலா், ஆசிரியா்களாக பணியாற்றிய 50 பேரின் வாழ்வாதாரம் கருதி அவா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com