பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி அடுத்த மாமரத்துபள்ளம் பகுதியிலுள்ள பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமிற்கு கல்லூரி முதல்வா் செல்வவிநாயகம் தலைமை வகித்தாா்.
ஒசூா் கெட் ஸ்டாா் டெக் தனியாா் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கணினி அறிவியல் இறுதியாண்டு மாணவா்கள் 60 போ் கலந்து கொண்டனா். முகாமில் தனியாா் நிறுவனத் தோ்வுக் குழு அலுவலா்கள் சந்தோஷ்குமாா், ராஜாமணி ஆகியோா் 5 மாணவா்களை வெப் டெவலப்பா் பணிக்கும், 10 மாணவா்களை மாா்க்கெட்டிங் பீல்ட் பணிக்கும் தோ்வு செய்தனா்.
இதில் கணினி அறிவியல் துறை தலைவா் ஸ்ரீனிவாசன், கணினி அறிவியல் பேராசிரியா் பாரதி மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.