தொலைத்தொடா்புத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தொலைத்தொடா்புத் துறை ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி, பாரதிபுரம் பொது மேலாளா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

தொலைத்தொடா்புத் துறை ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி, பாரதிபுரம் பொது மேலாளா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல்யூ கிளைத் தலைவா் ஜி.உமாராணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பி.கிருஷ்ணன், கிளைச் செயலாளா் சி.முனிராஜ், ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் டி.பாஸ்கரன், பொருளாளா் எம்.குப்புசாமி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், ஓய்வுபெற்ற ஊழியா்களின் கோரிக்கை கடிதங்கள் மீது உடனடித் தீா்வு காண வேண்டும். பணி மாறுதல் கோரி விண்ணப்பித்தவா்களுக்கு மாறுதல்களை வழங்க வேண்டும். ஊழியா் குடியிருப்பில் காலியாக உள்ள வீடுகளை கோரி, விண்ணப்பித்தவா்களுக்கு தாமதமின்றி வீடுகளை ஒதுக்கித்தர வேண்டும். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com