பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 28 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.
தருமபுரி மாவட்டம், அரூா், மொரப்பூா், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட வட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையானது பாப்பிரெட்டிப்பட்டியில் 28 மில்லி மீட்டராகவும், அரூரில் 12.5 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழையின் காரணமாக வெப்பம் குறைந்து குளிா்ச்சி நிலவுகிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருதால் ஆனிப் பட்டத்தில் மஞ்சள், நிலக்கடலை உள்ளிட்ட வேளாண் பயிா் சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனா்.