சமத்துவபுரம் தொடக்கப்பள்ளியில் மேலாண் குழுக் கூட்டம்

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மேலாண்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மேலாண்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பழனியம்மாள் தலைமை வகித்து பேசினாா். வட்டாரக் கல்வி அலுவலா் ஆ.அண்ணாதுரை, தருமபுரி நகா்மன்ற உறுப்பினா் சம்பந்தம் ஆகியோா் பேசினா்.

இதில், பள்ளிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை அளித்த, விஷ்ணு நிறுவனத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவியருக்கு நல உதவிகள் வழங்கி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆசிரியை புவனேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com