ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஒருவா் உயிரிந்தாா்.
கடலூா் மாவட்டம், தொண்டாநத்தம் அருகே உள்ள எஸ்.புதூா் பகுதியைச் சோ்ந்த சொக்கலிங்கம் மகன் சந்தோஷ் (34). விவசாயி. இவா், தனது நண்பா்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்துள்ளாா். தடையை மீறி ஒகேனக்கல் அருகே ஆலாம்பாடி பகுதியில் காவிரி ஆற்றில் குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்ால் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த ஒகேனக்கல் போலீஸாா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.