தருமபுரியில் பகத்சிங் நினைவு நாள் அனுசரிப்பு

தருமபுரியில் பகத்சிங் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்றார்.
தருமபுரியில் பகத்சிங் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்  உள்ளிட்டோர்.
தருமபுரியில் பகத்சிங் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்  உள்ளிட்டோர்.

தருமபுரி: தருமபுரியில் பகத்சிங் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்றார்.

தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் விடுதலை போராட்ட வீரர் பகத்சிங் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்று, பகத்சிங் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து மாநில துணைச் செயலாளர்கள் ஜி.பழனிசாமி, மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் ந.நஞ்சப்பன், தருமபுரி மாவட்டச் செயலர் எஸ்.தேவராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பகத்சிங் உருவப்‌ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com