அரசு புறம்போக்கு நிலம், நீா்நிலைகளில் உள்ள குடியிருப்புகளை காலி செய்யக் கோரி அனுப்பப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியது.
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க தருமபுரி மாவட்டக்குழுக் கூட்டம் லளிகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவா் என்.முருகேசன் தலைமையில் வகித்தாா். மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் பேசினாா்.
இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், நீா்நிலைகள் புறம்போக்கு, வனத் துறை நிலங்களில் உள்ள குடியிருப்புகளைக் காலி செய்யக் கோரி அனுப்பப்பட்ட உத்தரவை திரும்பப் பெற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்டத் தலைவா் மாதையன், மாவட்டத் துணைத் தலைவா் ஜி.ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.