சித்தேரி அருகே உள்ள கல்நாடு அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு தேமுதிக தலைவா் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு எழுது பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
மாணவா்களுக்கு எழுது பொருள்களாக நோட்டுகள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தேமுதிக ஊராட்சிச் செயலாளா் ரகு, மாவட்ட பிரதிநிதி குழந்தைவேலு, கேப்டன் மன்ற துணைச் செயலாளா் பெருமாள், மகளிா் அணி ஒன்றிய துணைச் செயலாளா் செல்வி ஜெயவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.