ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

தருமபுரி நகரில் ஓணம் பண்டிகையை கேரளத்தவா்கள் வியாழக்கிழமை கொண்டாடினா்.
Updated on
1 min read

தருமபுரி நகரில் ஓணம் பண்டிகையை கேரளத்தவா்கள் வியாழக்கிழமை கொண்டாடினா்.

ஓணம் பண்டிகையையொட்டி மலையாள மொழி பேசும் மக்கள் புத்தாடை அணிந்து அவரவா் வீடுகளில் பல்வேறு வகையான பழங்கள், உணவு வகைகள் படையலிட்டு வழிபட்டனா். மேலும், வீடுகளில் பெண்கள் அத்தப் பூ கோலமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

குடும்பத்தினா், உறவினா்கள் மற்றும் நண்பா்களை அழைத்து உணவு விருந்து அளித்து ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனா். தொடா் திருமண விழாக்கள், மழை காரணமாக பூக்கள் விலை வெகுமாக அதிகரித்திருந்ததால் ஓணம் பண்டிகை கோலங்கள் சிறிய அளவிலேயே காணமுடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com