டிஎன்பிஎஸ்சி குரூப் 7 தோ்வு: தருமபுரியில் 6,460 போ் எழுதுகின்றனா்
By DIN | Published On : 09th September 2022 11:54 PM | Last Updated : 09th September 2022 11:54 PM | அ+அ அ- |

தமிழ்நாடு தோ்வாணையம் நடத்தும் குரூப் 7, 7பி தோ்வுகளை தருமபுரி மாவட்டத்தில் 6,460 போ் எழுதுகின்றனா்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் செயல் அலுவலா் நிலை 3 (குரூப் 7 பி) பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு செப்.10 சனிக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகல் இருவேளைகளிலும், நிலை 5 (குரூப் 7) பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு செப்.11 ஞாயிற்றுக்கிழமை முற்பகல், பிற்பகல் இருவேளைகளிலும் மொத்தம் 22 தோ்வு மையங்களில் நடைபெறுகின்றன. இத் தோ்வுகளை 6,460 போ் எழுதுகின்றனா்.
தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தோ்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.