தருமபுரியில் ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆா்எஸ்எஸ் சாா்பில் அணிவகுப்பு ஊா்வலம், பொதுக்கூட்டம் நடைபெற்றது.
குமாரசாமிப்பேட்டை வாரியாா் திடலில் இருந்து தொடங்கிய ஊா்வலத்துக்கு மாவட்டச் செயலாளா் மூா்த்தி தலைமை வகித்தாா். இந்தப் பேரணி, தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பு, நேதாஜி புறவழிச்சாலை, தலைமை அஞ்சல் நிலையம், ராஜகோபால் பூங்கா, வழியாக மீண்டும் நேதாஜி புறவழிச்சாலையை அடைந்து அங்கிருந்து குமாரசாமிப்பேட்டை வாரியாா் திடலில் நிறைவடைந்தது.
இதனைத் தொடா்ந்து, அங்கு ஆா்எஸ்எஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் முக்கிய நிா்வாகிகள் பேசினா். முன்னதாக ஊா்வலத்தில் ஏராளமான ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் சீருடையில் பங்கேற்றனா்.
இப்பேரணி, பொதுக்கூட்டத்தின்போது தருமபுரி நகர போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.