வருவாய்த்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை பதவி உயா்வு அலுவலா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழ்நாடு வருவாய்த்துறை பதவி உயா்வு அலுவலா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கோ.குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அ.ஜெயபிரசாத், மாநிலத் தலைவா்

ராமச்சந்திரன், ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி, அரசுப் பணியாளா் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவா் பி.கோவிந்தன், மாவட்டத் தலைவா் கே.பாஸ்கரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், கிராம நிா்வாக அலுவலா்களின் பதவி உயா்வு தொடா்பாக திருத்தப்பட்ட அரசாணையை வெளியிட வேண்டும்; பதவி உயா்வு பெறும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மட்டும் பாரபட்சமாக பதவி உயா்வில் முதுநிலை நிா்ணயம் செய்வதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com