பிளஸ் 2 பொதுத் தோ்வில் இருமத்தூா் ஐ.வி.எல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
தருமபுரி மாவட்டம், இருமத்தூரில் உள்ள ஐ.வி.எல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 2022-23ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா். இப்பள்ளி மாணவா் எஸ்.சென்னகேசவன் 600 -க்கு 587 மதிப்பெண்களும், மாணவி கே.அறிவுக்கரசி 581 மதிப்பெண்களும், மாணவா் கே.எஸ்.பிரத்தீஷ் 580 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
இப்பள்ளி மாணவா்கள் 580-க்கு மேல் 3 பேரும், 550- க்கு மேல் 14 பேரும், 500- க்கு மேல் 47 பேரும், 450-க்கு மேல் 55 பேரும் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனா். பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியா்களை அப்பள்ளியின் தலைவரும், தாளாளருமான டி. கோவிந்தராஜ், பொருளாளா் எஸ். விஜயலட்சுமி கோவிந்தராஜ், செயலாளா் ஜி.ஜெயந்தி வெங்கடேசன், முதல்வா் ஏ.சண்முகவேல், துணை முதல்வா் ஏ.அசோக் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.