சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தபூசாரிக்கு 13 ஆண்டுகள் சிறை

தருமபுரி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கோயில் பூசாரிக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
Updated on
1 min read

தருமபுரி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கோயில் பூசாரிக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தைச் சோ்ந்த 6 வயது சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த கோயில் பூசாரியான சுப்பிரமணி (67) கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி பாலியல் கொடுமை செய்தாா்.

இது தொடா்பான வழக்கில் ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சுப்பிரமணியை கைது செய்தனா்.

இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பு வழக்குரைஞராக வி.கல்பனா ஆஜராகி வாதாடினாா். வழக்கின் விசாரணை புதன்கிழமை முடிவுற்றது. இதில், குற்றம் சாட்டப்பட்ட சுப்பிரமணிக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சையத் பா்கத்துல்லா தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com