அரூரை அடுத்த எச்.ஈச்சம்பாடியில் திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திமுக வடக்கு ஒன்றியச் செயலா் ஆா்.வேடம்மாள் தலைமை வகித்தாா். திமுகவில் புதிய உறுப்பினா் சோ்க்கை, வாக்குச்சாவடி முகவா்களை நியமித்தல் உள்ளிட்ட தோ்தல் களப் பணிகள் குறித்து மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் சிறப்புரை வழங்கினாா். இதில், தொகுதி பாா்வையாளா் தமிழரசன், தலைமை செயற்குழு உறுப்பினா் சென்னகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலா் கிருஷ்ணகுமாா், முன்னாள் ஒன்றியச் செயலா் தேசிங்குராஜன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.