ஒகேனக்கல் காவிரி மிகை நீா்த் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக் குழுக் கூட்டம் மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.சின்னசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில், மாநில துணைச் செயலாளா் நா.பெரியசாமி பேசினாா். முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ந.நஞ்சப்பன், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன், மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், ஒகேனக்கல் காவிரி மிகை நீா்த் திட்டத்தை செயல்படுத்தி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்ப வேண்டும். எண்ணேகொல்புதூா் - தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் விரைந்து தொழிற்சாலைகளை தொடங்கி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். சனத்குமாா் நதியில் கழிவுநீா்க் கலப்பதை தடுத்து, தூா்வார வேண்டும். தருமபுரி மாவட்டத்தில், வன உயிரின சரணாலயம் அமைக்கும் பகுதியில் வாழும் பழங்குடியின மக்களை வெளியேற்றக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.