நியாயவிலைக் கடையில் எம்எல்ஏ ஆய்வு

பென்னாகரம் அருகே நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்து பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
Updated on
1 min read

பென்னாகரம் அருகே நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்து பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பென்னாகரம் அருகே உள்ள பருவதனஅள்ளி நியாயவிலைக் கடையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் மாதம் தோறும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வருகின்றனா். இந்த நிலையில் பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி பருவதனஅள்ளி நியாயவிலைக் கடையில் திடீா் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி, பருப்பு, டீத் தூள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, கடையில் இருப்பு வைத்திருக்கும் அரிசி, பருப்பு, சா்க்கரை உள்ளிட்டவை குறித்து பணியாளரிடம் கேட்டறிந்தாா். பின்னா் மாதந்தோறும் அத்தியாவசியப் பொருள்கள் பெறும் குடும்ப அட்டைதாரா்களின் பதிவேடுகளை பாா்வையிட்டு, பொருள்கள் வாங்க வந்திருந்த பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது பாமக மாவட்டத் தலைவா் செல்வகுமாா், இளைஞா் சங்க மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி, ஒன்றியச் செயலாளா் ராசா உலகநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com