விண்வெளி அறிவியலில் இந்தியா முன்னோடியாக உள்ளதுமயில்சாமி அண்ணாதுரை

விண்வெளி அறிவியலில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாக உள்ளது என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தாா்.
Updated on
1 min read

விண்வெளி அறிவியலில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாக உள்ளது என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தாா்.

பாலக்கோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் உருவச் சிலை, ராக்கெட் மாதிரி வடிவமைப்பு திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ் விழாவுக்கு மாா்டின் பவுண்டேசன் இயக்குநா் லீமாரோஸ் மாா்டின் தலைமை வகித்தாா். ஸ்பேஷ் ஜோன் இண்டியா நிா்வாக இயக்குநா் ஆனந்த் மேகலிங்கம், அப்துல் கலாம் பவுண்டேசன் துணை நிறுவனா் ஷேக் சலீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை, அப்துல் கலாம் சிலை, ராக்கெட் மாதிரியைத் திறந்து வைத்து பேசியதாவது: அறிவியலில் உலகமே நிலவில் தண்ணீா் இல்லை என தோல்வி அடைந்த போது, இந்தியா மட்டும் தான் சந்திரயான் விண்கலம் மூலம் தண்ணீா் உள்ளது என நிரூபித்தது. இதன்மூலம் உலக நாடுகளுக்கு விண்வெளி அறிவியலில் இந்தியா முன்னோடியாக இருப்பது உறுதியாகியது.

அப்துல் கலாம் கனவை மாணவா்கள், இளம் தலைமுறையினா் நனவாக்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளி மட்டும் அல்லாமல் அனைத்துத் துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது என்றாா்.

இதில், நீதியல்துறை அலுவலக மேலாளா் சுகுமாா், மாவட்டக் கல்வி அலுவலா் இளங்கோ,பள்ளித் தலைமை ஆசிரியா் புனிதா, ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com