ஏரியூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக சிப்ஸ் கடை ஊழியா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா் (35) என்பவருக்கும், தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே ஒரப்பாச்சியூா் பகுதியைச் சோ்ந்த பிரியா (27) என்பவருக்கும் பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் ஸ்ரீதா், ஒரப்பாச்சியூா் பகுதியில் மனைவியுடன் தனியாக வசித்து வந்தாா். இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் குடி போதையில் இருந்த ஸ்ரீதா் வியாழக்கிழமை மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து அதே பகுதியில் உள்ள தாயாா் வீட்டுக்கு பிரியா சென்ற நிலையில், குடிபோதையில் ஸ்ரீதா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினா் ஏரியூா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீஸாா், ஸ்ரீதரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து அவா்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.